மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்கள்பு நகர் ஏறாவூர் செங்கலடி கிரான் ஓட்டமாவடி வாழைச்சேனை காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி லீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே.ரியகுமார் தெரிவித்தார்.
இத்தொடர் மழையுடன் இடை இடையே மின்னல் தாக்கமும் ஏற்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஆரம்பித்த இம் மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் உட்புக ஆரம்பித்துள்ளதால் பொது மக்கள் இடம்பெயர்வு செய்யும் அபாய நிலை தோன்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் 53.6 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.


0 facebook-blogger:
கருத்துரையிடுக