திங்கள், 28 செப்டம்பர், 2015

அமெ­ரிக்­கா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ரணை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்வரன்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிரே­ரணை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தும் என்ற நம்­பிக்கை இருப்­ப­தாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்வரன் தெரி­வித்­துள்ளார்.

செங்­க­ல­டியில் நடை­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அக்னி இசைக்குழு தலைவர் எஸ்.ரகுவரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். 
 

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

“ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள வரைபில் என்ன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது-? தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா? என மக்கள் மத்­தியில் குழப்­ப­மான நிலை தற்­போது காணப்­ப­டு­கி­றது. எமது உற­வுகள் இந்த மண்­ணில் நீண்­ட ­கா­ல­மாக பல துன்­பி­யல்­களை அனு­ப­வித்­துக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள். எது மக்­களின் அவல­குரல் 2009 ஆம் ஆண்டின் பின்­புதான் ஐக்­கிய நாடுகள் சபைக்கு கொண்­டு செல்லப்பட்டது. போரின்­போது அர­சாங்­க­த்தினால் மனித உரிமை மீறப்­பட்­டமை, மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­ப­டாமை என்­ப­தற்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் சபை­யில் அமெ­ரிக்க அர­சாங்கம் ஒரு தீர்­மா­னத்தை கொண்­டு­வர முனைந்­தது. ஐக்­கிய நாடுகள் சபை­யில் ஒரு மேலைத்­தேய நாடு ஒரு தீர்­மா­னத்தை முன்­வைக்கும் போது கீழைத்­தேய நாடுகள், சீனா, இந்­தியா மற்றும் ஆபி­ரிக்க நாடுகள் அதை வலு­வி­ழக்­கச்­செய்யும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வார்கள். அதன் பிர­காரம் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இலங்­கையில் நடை­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டு­வந்­தது.
 
சர்­வ­தேச பொறி­மு­றை­க­ளுக்கு ஏற்ப விசா­ரணை மேற்­கொள்­ள­வேண்டும் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும், அநீதி விளை­வித்­த­வர்கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­பட வேண்டும் போன்ற பல கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் அமெ­ரிக்கா தனது செயற்­பாட்டை ஆரம்­பித்­திருந்­தது. இலங்­கை­யில் நடை­பெற்ற துன்­பி­யல்­க­ளுக்கு நீதியை அறி­யும் ­வ­கையில் உள்­நாட்­டிலும் நாங்கள் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளலாம் என்ற கருத்­துகள் இலங்கை அர­சினால் முன்­வைக்­கப்­பட்டு சர்­வ­தே­சத்தை ஏமாற்­று­வ­தற்­காக கற்றறிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் பற்­றிய ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அறிக்­கையும் வெளி­யி­டப்­பட்­டது என்றார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate