ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்
அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதியை நிலைநாட்ட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்ற
நம்பிக்கை இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
செங்கலடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அக்னி இசைக்குழு தலைவர் எஸ்.ரகுவரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைபில்
என்ன குறிப்பிடப்பட்டுள்ளது-? தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா?
என மக்கள் மத்தியில் குழப்பமான நிலை தற்போது காணப்படுகிறது. எமது
உறவுகள் இந்த மண்ணில் நீண்ட காலமாக பல துன்பியல்களை
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எது மக்களின் அவலகுரல் 2009
ஆம் ஆண்டின் பின்புதான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போரின்போது அரசாங்கத்தினால் மனித உரிமை மீறப்பட்டமை, மனிதாபிமான
உதவிகள் வழங்கப்படாமை என்பதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில்
அமெரிக்க அரசாங்கம் ஒரு தீர்மானத்தை கொண்டுவர முனைந்தது. ஐக்கிய
நாடுகள் சபையில் ஒரு மேலைத்தேய நாடு ஒரு தீர்மானத்தை முன்வைக்கும்
போது கீழைத்தேய நாடுகள், சீனா, இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் அதை
வலுவிழக்கச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அதன்
பிரகாரம் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை
மீறல்கள் தொடர்பாக ஆராயப்பட்டுவந்தது.
சர்வதேச பொறிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை
மேற்கொள்ளவேண்டும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அநீதி விளைவித்தவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் போன்ற பல
கோட்பாடுகளின் அடிப்படையில் அமெரிக்கா தனது செயற்பாட்டை
ஆரம்பித்திருந்தது. இலங்கையில் நடைபெற்ற துன்பியல்களுக்கு நீதியை
அறியும் வகையில் உள்நாட்டிலும் நாங்கள் விசாரணைகளை
மேற்கொள்ளலாம் என்ற கருத்துகள் இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்டு
சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும்
பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது
என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக