மட்டக்களப்பு கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா கடந்த (17) வியாழக்கிழமை ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நவநாட்கால வழிபாடுகள் நடைபெற்று, கடந்த (19) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அன்னையின் திருச்சுருப பவணி இடம்பெற்று. நேற்று முன்தினம் (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு பேரருட் தந்தை யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் அருட்பணி ரீ.யோசுபாலன் அடிகளார் மற்றும் இயேசு சபைத் துறவி யோசப் மேரி அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியினை ஒப்புக்கொடுத்திருந்தனர்.
இதன் நிறைவில் கொடியிறக்கம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு இறையாசி வழங்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவுபெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக