மலர்ந்துள்ள புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட புதுவருட ஆராதனை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் முன்னிலையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஆராதனைகள் நடாத்தப்பட்டதுடன் கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மறை மாவட்ட ஆயரினால் புதுருடத்தையொட்டி சிறைக்கைதிகளுக்கு மத நற்சிந்தனைகள் போதிக்கப்பட்டதுடன் புதுவருட அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
இதில் சிறைக்கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக