சனி, 23 மே, 2015

தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்­ட­மையால் தாக்­குதல் 5 பெரும்­பான்­மை­யின மாண­வர்கள் கைதாகிப் பிணையில் விடு­தலை

தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்­டமை தொடர்பில் உத்­தி­யோ­கத்தர் மீது தாக்­குதல் நடத்­திய சந்­தே­கத்தின் பேரில் அடை­யாளம் காட்­டப்­பட்ட ஐந்து பெரும்­பான்மை இன மாண­வர்கள் கைது செய்­யப்­பட்டுள்ளனர்.



கிழக்கு பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் கடந்த 16ஆம் திகதி நடை­பெற்ற தொழில்­நுட்பக் கண்­காட்­சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசி­ய­கீதம் பாடப்­பட்­ட­மையால் ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச செய­லக திட்­ட­மிடல் பிரிவின் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கஸ்தர் ஒருவர் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது­செய்­யப்­பட்­ட­ ஐவர் தலா ஐம்­ப­தா­யிரம் ரூபா சரீரப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன், எதிர்­வரும் ஜுன் மாதம் 23 ஆம் திக­திக்கு வழக்கு திக­தியும் குறிக்­கப்­பட்­டது. மேற்­படி நிகழ்வில் ஏறா­வூர்ப்­பற்று பிர­தேச செய­லக திட்­ட­மிடல் பிரிவின் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கஸ்­த­ரான பத்­தக்­குட்டி சுமன் தாக்­கப்­பட்­டி­ருந்தார்.இது தொடர்பில் செய்த முறைப்­பாட்டை தொடர்ந்து சந்­தே­கத்தின் பேரில் ஐவர் கைது செய்­யப்­பட்டு நேற்றுமுன்தினம் வியா­ழக்­கி­ழமை களு­வாஞ்­சிக்­குடி சுற்­றுலா நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.எம்.எம்.றியாழ் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர்.
சந்­தேகநபர்­களை அடை­யாளம் காண்­ப­தற்­காக அடை­யாள அணி­வ­குப்பும் நடத்­தப்­பட்­டது. இதன்­போது, ஐந்து பெரும்­பான்­மை­யின மாண­வர்கள் அடை­யாளம் காட்­டப்­பட்­டனர். சந்­தேகநபர்கள் சார்­பில்­ சட்­டத்­த­ரணி எம்.ஐ. உவைஸுர் றஹ்மான் ஆஜ­ரானார்.

சந்­தேக நபர்கள் முகா­மைத்­து­வப்­பீட இறு­தியாண்டு மாண­வர்கள் என்­ப­தனால், அவர்­களை பிணையில் விடு­விக்­கு­மாறு சட்­டத்­த­ரணி நீதி­ப­தியை கேட்­டுக்­கொண்டார். இதை தொடர்ந்து, ஜுன் 23ஆம் திக­திக்கு வழக்கு திகதி குறிக்­கப்­பட்­ட­துடன், சந்­தேக நபர்­கள் ­ஐ­வ­ரும் ­தலா ஐம்­ப­தா­யிரம் ரூபாய் சரீரப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டனர்.

கண்­காட்­சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசி­ய­கீதம் ஒலி­ப­ரப்­பப்­பட்டதாகவும் இதன் போது பெரும்­பான்­மையின மாணவர்­க­ளினால் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. எனினும், மீண்டும் சிங்­க­ளத்தில் தேசி­ய­கீதம் ஒலி­ப­ரப்­பப்பட்ட நிலையில் திடீ ­ரென பெரும்பான்மையின மாணவர்கள் சிலர் தன்னைத் தாக்கியதாகவும் பாதிக் கப்பட்டவரான சுமன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். தாக்குதலுக் குள்ளான அலுவலர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624840

Translate