கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து றைட்ஸ் நைவ் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா - ஊடகக் கற்கைகள் நிறுவன அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட பாதுகாப்புக்கான பயிற்சிப்பட்டறை இன்று(23.05.2015 சனிக்கிழமை காலை 09.30 ஆரம்மாகி நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையில் வளவாளராகப் பங்கு கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி தட்சனாமூர்த்தி சிவநாதன் ஊடகவியல் சட்டங்கள் தொடர்பாக விளக்கவுரையினை வழங்கினார். ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும், சமூகத்திலுள்ள மக்களுக்கு அறிவுரையினையும், அவர்களது பிரச்சினைகளையும் வெளிக் கொண்டுவருபவர்களாகவும் மக்கள் நலநோன்பு மனோபாவம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஊடகவியலாளராக இருக்க வேண்டுமாக இருந்தால் அவர் சமூகத்தில் எதிர் நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு, அதற்கான சக்தி, முயற்சி, விடயம் சம்பந்தமான அறிவினை உடையவராக இருத்தல் வேண்டும். அதனை வெளிப்படுத்துவதற்கான விருப்பம் இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கையில் தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டியச் சட்டங்கள் எழுதப்படாதவைகளாக காணப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் அரசியல் யாப்புச் சட்டமே நடைமுறையில் உள்ளது. இதுவே அதியுயர் சட்டமாகப் பேணப்படுகிறது என்று தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக