வெள்ளி, 22 மே, 2015

கல்முனையில் ஒரு தமிழ் பிரதேச செயலகமும், சபையும் அமைய வேண்டும் - அமிர்தலிங்கம்

மேலும், கல்முனையில் அன்றிருந்த கரவாகு மேற்கு என்னும் கிராம சபையை ஆட்சி செய்தவர்கள் தமிழர்களே என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்முனை பட்டின சபையின் தலைவராக தம்பிப்பிள்ளை எனும் தமிழர் அதிகாரத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கல்முனையில் தமிழர்களும் வாழ்கின்றார்களா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
விகிதாசார தேர்தல் முறைக்கேற்ப 33 வீதமான தமிழர்களைக் கொண்ட கல்முனையில் ஆறு உறுப்பினர்களை பெறக்கூடிய சந்தர்ப்பம் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிவதாகவும்,
இது ஒட்டு மொத்தமாக தமிழர்களை புறக்கணிக்கும் ஒரு செயலாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கல்முனை வாழ் தமிழ் மக்களின் இந்தக் கோரிக்கையினை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624946

Translate