செவ்வாய், 26 மே, 2015

ஆலய உற்­ச­வங்­களின் போது கேளிக்கை நிகழ்ச்­சி­களை தவிர்க்­குமாறு கோரிக்கை

கிழக்கில் நடை­பெறும் இந்து ஆலய உற்­ச­வங்­களின்போது கேளிக்கை நிகழ்ச்­சிகள் நடத்­து­வ­தையும் பெண்கள் அதி­க­ள­வான தங்க நகைகள் அணிந்து செல்­வதை தவிர்க்­கு­மாறும் இந்து சமய நிறு­வ­னங்கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய மாவட்­டங்­க­ளி­லுள்ள அம்மன் ஆல­யங்­களில் தற்­போது வரு­டாந்த உற்­ச­வங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. இந்­நி­லையில் கிழக்­கி­லுள்ள இந்து நிறு­வ­னங்கள் ஆலய நிர்­வாக சபை­யி­ன­ரிடம் சமய மரபு வழக்­கா­று­களை பின்­பற்­று­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளன.


கிழக்கில் வைகாசி மாதம் பத்­தினி தெய்வம் கண்­ணகி அம்மன் ஆலய திருக்­கு­ளிர்த்தி சடங்­குகள் நடை­பெ­று­வது வழக்­க­மாகும். இத­னை­யிட்டு அனைத்­துக்­ கி­ரா­மங்­களும் ஊர்க்­காவல் பண்­ணப்­பட்டு மிகுந்த பய பக்­தி­யுடன் இந்து மக்கள் சடங்கு சம்­பி­ர­தா­யங்­களை கட்­டுக்­கோப்­புடன் கடைப்­பி­டித்து வரு­கின்­றனர்.இந்­நி­லையில் ஆலய உற்­சவ காலங்­களில் சில இடங்­களில் இசைக்­கு­ழுக்கள் மற்றும் சினிமா சம்­பந்­த­மான கலை நிகழ்ச்­சிகள் என்­ப­வற்றை ஆலய முன்­றல்­களில் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­யக்­கி­டைக்­கின்­றது. இவ்­வா­றான நிகழ்­வுகள் இந்து சமய நடை­மு­றை­க­ளுக்கு எதி­ரான செய­லாகும்.
ஆலய உற்­சவ காலங்­களில் கேளிக்கை நிகழ்­வு­களை தவிர் த்து சமய மர­புகள், கலை கலா­சார நிகழ்­வு­களை ஒழுங்கு செய்து இந்து சமய விழிப்­பு­ணர்வை ஊட்­டு­மாறும் இந்து நிறு­வ­னங்கள் கேட்­டுள்­ளன. இதைத் தவிர ஆலய உற்­ச­வத்­திற்கு செல்லும் பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்­வதை தவிர்க்­கு­மாறும் கடந்த கால உற்­ச­வங்­களில் கலந்துகொண்ட பலரது தங்க நகைகள் திருடர்களால் திருடப்பட்டன. இவ்வாறான அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624940

Translate