மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் வலய மாக்கான் மாக்கார் வித்தியாலத்தின் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (28) பாடசாலை அதிபர் எம்.எம்.மொஹிடீன் தலைமையில் இடம்பெற்றது.சுமார் 950 மாணவர்களுடன் இயங்கிவரும் ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் ஏற்பட்டிருக்கும் கட்டிடப் பற்றாக்குறை சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பாடசாலை நிர்வாகம் எடுத்துக்கூறியதை தொடர்ந்து முதலமைச்சரால் குறித்த பாடசாலைக்கு 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட நிதியொதுக்கீட்டின் அடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலை கட்டிட அடிக்கல் நடும் விழா நேற்று (28) காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஏராவூர் வலையக் கல்வி அதிகாரி கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக