சனி, 23 மே, 2015

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் கீழ் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஆபத்தான நிலையில் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்புப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மூழ்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (சனிக்கிழமை) காலை வேளையிலேயே இவர் கல்லடி வாவியில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ணுற்ற அவ்விடத்தில் நின்றிருந்த பொலிஸார் வாவியில் குதித்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்டை மீட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அப்துர் றஹ்மான் (வயது 45) எனும் பொலிஸ் சார்ஜன்டே மீட்கப்பட்டவராகும். தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.இந்த சார்ஜன்ற் எவ்வாறு நீரில் மூழ்கினார் என்பது குறித்து மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624947

Translate