மட்டக்களப்பின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் ஐந்தாவது மாபெரும் கிரிக்கட் போட்டி(பிக் மட்ச்ஸ்) நாளை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
நாளை காலை 8.00மணியளவில் பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளது.
நாளை காலை ஆரம்பமாகவுள்ள ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா கலந்துகொள்ளவுள்ளார்.
ஐம்பது ஓவர்களைக்;கொண்டதாக இந்த கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளதுடன் இறுதி பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வின் வலய கல்விப்பணிப்பாளர்கள்,உதவி கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிகரத்தினை நோக்கி என்ற தொனிப்பொருளிலான பிக் மட்ச்ஸ் கிரிக்கட் போட்டியில் இரண்டு தடவைகள் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் இரண்டு தடவைகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பெரியகல்லாறு மத்;திய கல்லூரியும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்தமுறை பெரியகல்லாறில் நடைபெறும் இந்த போட்டியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கிரிக்கட் ஆர்வலர்களால் நோக்கப்படுகின்றது.
நாளை காலை 8.00மணியளவில் பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளது.
நாளை காலை ஆரம்பமாகவுள்ள ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா கலந்துகொள்ளவுள்ளார்.
ஐம்பது ஓவர்களைக்;கொண்டதாக இந்த கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளதுடன் இறுதி பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வின் வலய கல்விப்பணிப்பாளர்கள்,உதவி கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிகரத்தினை நோக்கி என்ற தொனிப்பொருளிலான பிக் மட்ச்ஸ் கிரிக்கட் போட்டியில் இரண்டு தடவைகள் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் இரண்டு தடவைகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பெரியகல்லாறு மத்;திய கல்லூரியும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்தமுறை பெரியகல்லாறில் நடைபெறும் இந்த போட்டியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கிரிக்கட் ஆர்வலர்களால் நோக்கப்படுகின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக