வியாழன், 28 மே, 2015

காணாமல் போனதாக கூறப்பட்டவர்கள் பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இருவர் நேற்று (26.05.2015) தொழில் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்திற்குச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட இருவரும் குச்சவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காணமால் போனவர்களது உறவினர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.



ஓட்டமாவடி 02ம் வட்டாரம் பி.எஸ் வீதியைச் சேர்ந்த சஹாப்தீன் நாசர் மற்றும் இஸ்மாலெப்பை அதம்பாவா ஆகிய இருவரும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை நிலாவளி, குச்சவெளி பொன்ற பகுதிகளுக்குச் சென்று படகின் இயந்திரங்களை கொள்முதல் செய்து மட்டககளப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விற்பனை செய்து வந்தவர்களாவர்.
இவர்கள் விற்பனை செய்த படகு இயந்திரங்களில் சில திருடப்பட்டு திருடர்கலால் இவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட இயந்திரங்களும் உள்ளது என்று குச்சவெளி பொலிஸார் தெரிவித்ததாக இவர்களது குடும்ப உறவினர் தெரிவித்தார்.
குச்சவெளி பொலிஸ் பிரிவில் படகு இயந்திரங்கள் திருட்டுடன் சம்மந்தப்பட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில இவர்கள் பொலிஸாருககு வழங்கிய தகவலின் அடிப்படையிலயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பாக குச்சவெளி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்மந்தப்படரவ்களின் குடும்ப உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate