மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட ஐயங்கேணி பிரதேசத்தில் இரண்டு தமிழ் பெண்களுக்கு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.நேற்று(25.05.2015) திங்கட்கிழமை மாலை சுமார் 3.30 மணியளவில் ஐயங்கேணி எல்லைக் கிராமத்து பகுதிக்கு விறகு எடுக்கச்சென்ற வேளையில் மூன்று முஸ்லிம் இளைஞனர்கள் வாள்களுடன் வந்து தாக்கியதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவத்தில் சிறிதேவிப்பிள்ளை (வயது 56) தளவாய், இராசம்மா (வயது 60) ஐயங்கேணி ஆகிய பிரதேசங்களிலுள்ள இரண்டு தமிழ் பெண்களே தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக