கடந்த 16.05.2015 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியும் சமூக நாளும் நிகழ்வில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள மாணவர்களினால் ஏறாவூர்பற்று பிரதேச செயலக ஊழியர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, எதிர்வரும் 22.05.2015 வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய பூரண பணிப்பகிஸ்கரிப்பிலும் கடையடைப்பிலும் ஈடுபடுமாறு நாம் திராவிடர் அமைப்பு அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றது.
இவாறான காடையர்களின் செயலானது, நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியாகுமெனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எமது அமைப்பு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறதென அமைப்பின் தலைவர் செங்கலடி மோகன் தெரிவிப்பதுடன்,
அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான செயல்களுக்கு எதிராக கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டுமெனவும் அழைப்பு விடுக்கின்றார்.
அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான செயல்களுக்கு எதிராக கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டுமெனவும் அழைப்பு விடுக்கின்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக