அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையை நிர்ணயிப்பது தொடா்பாக இன்று இரண்டு மாவட்டங்களின் எல்லைக்கிராமமான பெரிய நீலாவணை ,பெரிய கல்லாறு கிராமங்களின் மக்ளிடையே முரண்பாடுகள் ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதானது....
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக அம்பாறை மாவட்ட நிருவாக எல்லையில் இருக்கும் பெரியநீலாவனண கிராம மக்களுக்கிடையிலும், மட்டக்களப்பு மாவட்ட நிருவாக எல்லையில் இருக்கும் பெரிய கல்லாறு கிராம மக்களுக்கிடையிலும் மாவட்ட எல்லையை நிர்ணயிப்பதில் முரண்பாடு காணப்பட்டுவருகிறது.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லை தொடர்பாக நீண்டகாலமாக அம்பாறை மாவட்ட நிருவாக எல்லையில் இருக்கும் பெரியநீலாவனண கிராம மக்களுக்கிடையிலும், மட்டக்களப்பு மாவட்ட நிருவாக எல்லையில் இருக்கும் பெரிய கல்லாறு கிராம மக்களுக்கிடையிலும் மாவட்ட எல்லையை நிர்ணயிப்பதில் முரண்பாடு காணப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று காலை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் எல்லை நிர்ணயிப்பது தொடர்பாக இக்கிராம மக்களை அணுகியபோது, இரு கிராம மக்களிடையேயும் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டு அவர்களுக்கிடயில் முரண்பாடு ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு கல்முனை பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயளலாளர் கோபாலரெட்ணம் ஆகியோரும் ,மாகாணசபை உறுப்பினர்களான கி.நடராசா ,மு.இராஜேஸ்வரன், வெள்ளிமலை ஆகியோர் இவ்விடத்திற்கு விரைந்து சென்று இரண்டு கிராம மக்களுடனும் கலந்துரையாடி முரண்பாட்டு நிலையை தவிர்த்து சமாதனப்படுத்தினா்.
சம்பவ இடத்திற்கு கல்முனை பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயளலாளர் கோபாலரெட்ணம் ஆகியோரும் ,மாகாணசபை உறுப்பினர்களான கி.நடராசா ,மு.இராஜேஸ்வரன், வெள்ளிமலை ஆகியோர் இவ்விடத்திற்கு விரைந்து சென்று இரண்டு கிராம மக்களுடனும் கலந்துரையாடி முரண்பாட்டு நிலையை தவிர்த்து சமாதனப்படுத்தினா்.
இவ் எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் கலந்துரையாடி பின்னர் தீர்வு காணப்படும் என்றும் தற்போது இயங்குவது போன்று இரண்டு கிராமங்களும் அதே நிருவாக எல்லைகளுக்குள் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலைமை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாகாண சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்.....
உதவி தேர்தல் ஆணையாளர்கள் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்காமல் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் இந்த எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்த இடத்திற்கு வருகை தந்து மக்களை அணுகிய முறை காரணமாகவே இன்று இக்கிராம மக்கள் மத்தியில் முருகல் நிலை ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதில் ஏதும் அரசியல் பின்னணி இருக்கிறதா என்று சந்தேகிக்கக் கூடியதாகவும் உள்ளது. மக்கள் இந்த விடயத்தில் அவசரப்படாமல் இரண்டு கிரமமும் எம்மக்கள்தான் எனவே முரண்பாடாமல் இருக்கவேண்டும்.இருக்கும் ஆவணங்களை பரிசீலித்து சுமுகமாக முடிவைக்காணலாம் என்று தெரிவித்தனர்
இதில் ஏதும் அரசியல் பின்னணி இருக்கிறதா என்று சந்தேகிக்கக் கூடியதாகவும் உள்ளது. மக்கள் இந்த விடயத்தில் அவசரப்படாமல் இரண்டு கிரமமும் எம்மக்கள்தான் எனவே முரண்பாடாமல் இருக்கவேண்டும்.இருக்கும் ஆவணங்களை பரிசீலித்து சுமுகமாக முடிவைக்காணலாம் என்று தெரிவித்தனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக