(Vanchi Oli) வரலாற்று சிறப்பு மிக்க களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வரலாறு போற்றும் பாடல் இறுவெட்டுக்கள் வெளியீடப்பட்டது. 26.05.2015 மாலை 5.15 மணியளவில் Dr.ப.சதீஸ் அவர்களால் எழுதப்பட்டு ஆலய உதவிக் குரு க.தர்சனன் குருக்களால் பாடப்பட்ட கண்ணகை அம்மன் கும்பிப் பாடல் வெளியிடப்படது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
27.05.2015 மாலை 5.15 மணியளவில் Dr.ப.சதீஸ் அவர்களால் எழுதப்பட்டு பாடகர் ம.வினோகரன் அவர்களால் பாடப்பட்ட பிள்ளையார், கண்ணகை அம்மன் பக்திப் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் Dr.கு.சுகுணன், பாடும் மீன் சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன் போது இவ் இறுவட்டுகள் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக