புதன், 27 மே, 2015

சம்மாந்துறை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

சம்மாந்துறை  கோரக்கர் கோயில் தமிழ் மகா வித்தியாலயத்தில்  க.பொ.த (சா/த)  பயின்ற மாணவியான கனகசூரியம் நிலக்சிகா (வயது 15) நேற்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கோரக்கர் கோயில் உதயபுரம் தமிழக்குறிச்சி  4 ஆம் பிரிவிலுள்ள அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி மீட்கப்பட்டார்

சம்பவ இடத்திற்கு நேற்று(26.05.2015) பிற்பகல் 3.30  மணியளவில் சென்ற சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் தூக்கில் தொங்கிய மாணவியைப் பார்வையிட்டு அறிக்கையிட்டார்நேற்றுக்காலையில் நிலக்சிகாவின் தாயார் வேலைக்கு சென்றதுடன் சகோதரர்களும் பாடசாலைக்கு சென்றுள்ளனர் . நிலக்சிகா பாடசாலை செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்

இந்நிலையில் சகோதரர்கள்  பாடசாலை விட்டு பிற்பகல் 1.40மணியளவில் வீடு வந்த போதுதான் நிலக்சிகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் இம்முறை க.பொ.த (சா//த)  பரீட்சை எழுதவிருந்த இம்மாணவியின் மரணம் குறித்து சம்மாந்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate