ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரவேலியார் கிராமத்திலுள்ள வீடொன்றில்; புத்தம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடிச்செல்ல முற்பட்ட 22 வயதுடைய ஒருவரை சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை ஒருவர் சிரமப்பட்டு தள்ளிச்செல்ல முற்பட்டதை இரவு வேளை ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவதானித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, மோட்டார் சைக்கிளை திருடிச்செல்ல முற்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக