கிழக்கு இலங்கை இந்து குருமார் பேரவையில் நீண்டகாலமாக நிலவிய செயலாளர் பதவிக்கான வெற்றிடத்துக்கு சிவஸ்ரீ பாலச்சந்திரன் குருக்கள் சபையோரினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதாக அப்பேரவையின் ஊடகப் பேச்சாளர் சிவ ஸ்ரீ சண்முகநாதன் குருக்கள் தெரிவித்தார். மட்டக்களப்பு வீரகத்திப் பிள்ளையார் கோவில் முன்றலில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின்போதே, இவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் குருமார்களின் பிள்ளைகளினுடைய எதிர்கால கல்வி நடவடிக்கையை கருத்திற்கொண்டு பிரத்தியேகமாக வேதாகம பாடசாலையை நிறுவுவதற்கு குருமார்களின் நிதியுதவியுடன் காணி கொள்வனவு செய்து அரசு நன்கொடை மூலம் கட்டடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளல், மாணவர்களின் அறநெறியை வளர்க்கப் பாடுபடுதல், இந்துசமய வழிபாட்டுக்கும் சமய வளர்சிக்கும் உந்து சக்தியாக செயற்படுதல் போன்ற தீர்மானங்களும்; நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக