முறக்கொட்டான்சேனை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை மற்றும் ஆராதனையை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ பாற்குட பவனியானது ஊர்வலமாக முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியூடாக அம்மனின் ஆலயத்திற்கு வருகைதந்ததும் ஆலயத்தின் நித்திய பூசகர் கந்தன் இளையதம்பி அவர்களினால் விசேட பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கு பாலினால் அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து மதிய நேர பூசைகள் நடைபெற்றது.
அம்மனின் 21வது வருடாந்த அலங்கார உற்சவ திருச்சடங்கு எதிர்வரும் திங்கள் கிழமை (27) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது ஐந்து உற்சவங்களை கொண்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக