வெள்ளி, 31 ஜூலை, 2015

மட்டக்களப்பில் உதைபந்தாட்டம் பின்தங்கிய நிலையில் செல்கின்றது –பிரதிக்கல்வி பணிப்பாளர் லவகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உதைபந்தாட்டத்துறை மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுகொண்டுள்ளதாக மட்டக்களப்பு வலய பிரதி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்வி வலயமும் மட்டக்களப்ப மாவட்ட உதைபந்தாட்ட சங்கமும் இணைந்து 17வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் ரஞ்சித் ரொட்றிக்கோ சவால் கிண்ணத்தினை நடாத்தவுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு வலய கல்வி அலுவகத்தில் நேற்று பிற்பகல் வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் உதைபந்தாட்டத்துறையினை மேம்படுத்தும் வகையில் இந்த போட்டித்தொடர் முன்னெடுக்கப்படவுள்ளது.

நீர்கொழும்பு உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த உதைபந்தாட்ட தொடர் குறித்து ஆராயும் கூட்டத்தில் மட்டக்களப்ப மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் உதயராஜ்,செயலாளர் தேவகாந்தன் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள்,உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பத்து பாடசாலைகளுக்கான கால்பந்துகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate