ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஆரையம்பதியில் மது பாவனை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

அண்மைக்காலமாக மது பாவனை அதிகரித்துவரும் நிலையில் மது  ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 07.10.2016ம்திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

உதவி பிரதேச செயலாளர் திருமதி ல.பிரசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமிய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் பொதுமக்களுக்குமாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியதிகாரி அல்மேதா  வளவாளராக கலந்துகொண்டு கருத்தரங்கினை நடாத்தியிருந்தார்.

இதன்போது இளைய சமுதாயத்தின்ம மத்தியில் மது பாவனையினை குறைப்பது தொடர்பாகவும் புகைத்தலை முற்றுமுழுதாக தடுப்பதற்கான வழிகள் தொடர்பாகவும் இவற்றினால் ஏற்படும் பாதுப்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624975

Translate