மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பற்சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று(07.10.2016) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையின்; தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது இன் நிகழ்வில் பல் வைத்தியர் கதிரேசப்பிள்ளை மேகநாதன் அவர்களினால் மாணவர்களிற்கு பற்சுகாதாரம் பற்றியும்,வாய்சுகாரம் பற்றியும் பற்களை பல் நோய் வரமால் தடுப்பது பற்றியும் மற்றும் பற்களை சுத்தம் செய்வது பற்றியும் விளக்கம்மளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் பற்களின் சுகாரம் பற்றி சோதனையிட்ட பல் வைத்தியர் பற்களில் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு பற்சிகிச்சையை மேற்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கதுடன் அவர்களின் பெயர் விபரங்களை பாடசாலையில் அதிபர் எஸ்.சிறிதரம் அவர்களிடம் பெற்றுக் கொண்டார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக