-ஜெயஹரி-
தேசிய உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஆரையம்பதி பிரதேச சபையில் (04.10.2016) நடைபெற்றது. இதில் இருபத்தைந்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர். தொடர்ந்து ஆதனவரி தொடர்பான நடமாடும் சேவை இன்று 06.10.2016 கோயில்குளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் காலை 8.30 தொடக்கம் நடைபெறுகின்றது.
தேசிய உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஆரையம்பதி பிரதேச சபையில் (04.10.2016) நடைபெற்றது. இதில் இருபத்தைந்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர். தொடர்ந்து ஆதனவரி தொடர்பான நடமாடும் சேவை இன்று 06.10.2016 கோயில்குளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் காலை 8.30 தொடக்கம் நடைபெறுகின்றது.
சபையின் செயலாளர் ந.கிருஸ்னபிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இன் நிகழ்வுகளில் மக்கள் தங்களது சேவைகளை இலகுவாக பெறக்கூடிய வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதனவரி செலுத்துதல், வியாபார அனுமதிப் பத்திரம் பெறல் வீட்டு விலங்குகளுக்கான அனுமதி, மற்றும் கட்டிட விண்ணப்பங்கள் இதில் வினியோகிக்கப்படுகின்றது. பொது மக்களுக்காக சேவையினை இலகுபடுத்தும் பொருட்டு தொடர்ச்சியாக இச் சேவையினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சபையின் செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக