வியாழன், 27 அக்டோபர், 2016

ஆரையம்பதியில் "இப்போ விடுமுறை காலம்"

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய  "இப்போ விடுமுறை காலம்" எனும் தொனிப்பொருளில் பட்டம் விடும்  விழா மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில்  கர்ப்பலா கடற்கரையில்  நேற்று (26) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிறார்களிடையேயான ஆக்கத்திறனினை ஊக்குவித்தல் மற்றும் ஒற்றுமை போன்றவற்றினை ஏற்படுத்துவதன் ஊடாக சிறார்களுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திகொடுக்குமுகமாக ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி அவர்கள் கலந்துகொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரசந்தன் லக்ஷன்யா அவர்களும்  கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பட்டமிடும்  போட்டி நிகழ்த்தப்பட்டு இப்போட்டியில்   கலந்துகொண்ட  அனைத்து சிறார்களுக்கும்  பரிசில்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate