அறிவியலுக்கும் அப்பால் சென்று தெய்வீக வழிபாட்டின் மூலம் மழையை வரவழைக்கலாம் என்ற மரபு முறையிலான தெய்வீக சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு கொம்பு வாரம் புரிந்து இன்றைய தினம் கொம்பு உடைத்து மழையை வரவழைத்த ஈரளக்குள மக்கள்.மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமாகவும் வயல், மலை, காடு, வயல், குளம் போன்ற இயற்கை எளில் மிக்கதாக விளங்கும் ஈரளக்குளத்திலுள்ள பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து வடசேரி கொம்பு மற்றும் தென்சேரி கொம்பு என இரு குழுக்களாக பிரிந்து அவரவர் கொம்புகளுக்கு பூசை செய்து இறுதி நாளாகிய இன்றைய தினம் கொம்பு முறித்தல் அல்லது கொம்பு உடைத்தல் நிகழ்வு பாரம்பரிய முறையில் இடம்பெற்றது.
குறித்த கொம்பு உடைத்தல் விளையாட்டானது நடாத்துவதற்கு முக்கிய காரணமாக அமைவது நாட்டில் அல்லது மாவட்டத்தில் அல்லது கிராமப் புறங்களில் நீண்ட காலமாக நிலவும் வரட்சியினால் வயல், சேனைப் பயிர் செய்கை, விலங்குகளுக்குரிய தண்ணீர் போன்ற பல்வேறுட்ட தேவைகளுக்கு நீர் இல்லாத நிலை ஏற்படும் போது உரிய நேரகாலத்துக்கு மழை கிடைக்காத போது குறிப்பாக இப்படியான கிராமப் புறங்களில் கண்ணகை அம்மனிடம் மழை வேண்டி கொம்பு கட்டி கிராம மக்கள் வழிபடுவதாக அமையும் தெய்வீகம் மற்றும் பாரம்பரியம் சார்ந்ததும், இன்றைய கால அறிவியலுக்கும் அப்பால் எங்கள் வழிபாடு வேண்டுதல் நிறைவேறுகின்றது, அதனால் கண்ணகை அம்மன் அருளால் உங்களுக்குரிய மழை நீர் கிடைக்கின்றது, அதனால் குடிமக்களாகிய நாங்கள் சந்தோசமாக அம்மனுக்குரிய மடைவைத்து அம்மனை வழிபடுகின்ற முறையாக இந்த கொம்பு கட்டி உடைத்தல் அமைகின்றது என ஈரளக்குள குடிமகனான எஸ்.செல்வம் தெரிவித்தார்.
நடைபெற்ற கொம்பு உடைத்தல் நிகழ்வில் மிகவும் இயற்கைய அமையப்பெற்ற இடத்தில் கிராமத்து மக்கள் உன்றுகூடியிருந்த வேளை வடசேரி மற்றும் தெக்சேரி என இரு கொம்புகளும் கொண்டுவரப்பட்டு இரு குழுக்களும் கொம்பமை உடைப்பதற்காக மரத்தில் கொம்பைக் கட்டி இழுத்தனர்.
இறுதியில் வடசேரி கொம்பு மற்றும் தென்சேரி என இரு கொம்புகளும் பலத்த இழுவையின் நிமிர்த்தம் நிலைமாறிய நிலையில் எந்தவொரு கொம்பும் உடைக்கப்படவில்லை. இறுதியில் இரு குழுக்களும் அவரவர் கொம்புகளை எடுத்தக்கொண்டு வெற்றிகளை கண்ணகை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்து வெற்றியைக் கொண்டாடியதுடன் பூசை நிகழ்வுகளுடன் நிறைவடைந்தன. குறித்த கொம்பு உடைத்தல் நிகழ்வுகளுக்கு ஈரளக்குளம் இலாவாணை ஸ்ரீ குமாரர் ஆலய அரங்காவலர்கள் பூரண ஒத்தழைப்பை வழங்கயிதுடன் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட வரட்சியின் காரணமாக வந்தாறுமூலை கிராமத்திலும் மழை வேண்டி கொம்பு கட்டி உடைக்கும் வழிபாட்டினை கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக