சனி, 1 அக்டோபர், 2016

பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்!

சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று(01.10.2016) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் தலைமையில் ஆரம்பமானது இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதவான் நீதிபதி மா.கணேசராஜா அவர்களும் கௌரவ அதிதியாக போராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களும் சிறப்பு அதிதிகளாக சிரேஸ்ர நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகுமார் அவர்களும் களுதாவளை மகாவித்தியலயத்தின் அதிபர் காப்தீபன் மற்றும் கடுக்காமுனை வணிவித்தியாலயத்தின் அதிபர் ச..கருணாமூர்தி அவர்களும் மேலும் பலரும் சிறுவர் தின விழாவில் கலந்து கொண்டனர்.


இன் நிகழ்வின் முதல் நிகழ்வான அதிதிகளை பன்ற் வாத்தியத்துடன் வரவேற்று அழைத்து வரப்படனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்தினை தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை திலகவதியார் இல்ல மாணவியர் ஆற்றுகைப்படுத்தினர் அதனை தொடர்ந்து தலைமையுரை நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் நிகழ்த்தினார். சிறப்பு அதிதிகளின் உரை வரிசையில் சிரேஸ்ர நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகுமார் மற்றும் களுதாவளை மகாவித்தியலயத்தின் அதிபர் காப்தீபன் அவர்களும் உரையாற்றினர். கௌரவ அதிதியாகன போராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களும் உரையாற்றினார்.

தரம் -5 க.பொ.த (சா.த) மற்றும் உயர்தரத்தில் சாதனை படைத்த பட்டிருப்பு கல்வி வலய மணவர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டுது. பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதவான் நீதிபதி மா.கணேசராஜா அவர்களில் விசேட உரையும் இடம் பெற்றது.




















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624946

Translate