வெள்ளி, 28 அக்டோபர், 2016

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் ஐயன்கேணி பாடசாலை வீதி புனரமைப்பு

காலத்துக்கு காலம்  சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கும் இந்த  வீதியானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்பட்டாமல் காணப்பட்டது. கடந்த காலங்களில்  ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்துக்கு கிராமத்தில் ஒரு நாள் நிகழ்விற்கு சென்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் பாடசாலை வீதியை புனரமைப்பு செய்து தரும்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இவ் வீதியை பயன்படுத்தும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் போன்றோர் சேதமடைந்த இந்த வீதியால்  பயணம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டுவதாகவும் கூறப்பட்டது. இக் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை  எடுத்த  பாராளுமன்ற உறுப்பினர்  வீதி அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் இவ் வீதியை புனரமைப்பு செய்யும் படி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு  பணிப்புரை விடுத்தார்.

 இதற்கமைய இவ் வீதிக்கான புனரமைப்பு பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களால்  ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை நிர்வாக பொறியியலாளர் சசினந்தன், கிராம சேவகர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,  மாணவர்கள்,  கிராம மக்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624975

Translate