அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் ஆகிய இரண்டு போட்டிகளிலும் மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய மாணவன் ஜெயரெட்ணம் ரிஷானன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பறை
விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதில் இவ்வெற்றியினை பெற்றுள்ளார். 13.70 மீற்றர் தூரம் குண்டெறிந்தும், 46.56மீற்றர் தூரம் பரிதி வட்டம் வீசி இரு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் 17 வயதின் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டியில் 3.10 மீற்றர் பாய்ந்து கே.சந்திரகுமார் வர்ணச்சாதனையை நிகழ்த்தியதோடு இப்போட்டியில் 7ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக