புதன், 13 மே, 2015

பனிச்சையடி அருள்மிகு கண்ணகியம்மன் ஆலய பால்குட பவனியும் சங்காபிசேகமும்

மட்டக்களப்பு,சத்துருக்கொண்டான் பனிச்சையடி அருள்மிகு ஸ்ரீகண்ணகியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.


இன்று காலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து மாபெரும் பால் குட பவனி நடைபெற்றது.

கரகாட்டம்,மயிலாட்டம்,ஒயிலாட்டம்,காவடியாட்டம் சகிதம் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடங்களை தாங்கியவாறு இந்த பால்குட பவனியில் கலந்துகொண்டனர்.

பால்குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும் ஆலயத்தினை சென்றடைந்ததும் அடியார்கள் கொண்டுசென்ற பால் மூலமூர்த்தியாகிய கண்ணகியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் 108 சங்குகளுக்கும் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் இறுதியான அன்னதானமும் வழங்கப்பட்டது.





















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate