வெள்ளி, 27 நவம்பர், 2015

புணாணை கிழக்கில் 29 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் - பா.உ யோகேஸ்வரன்



மட்டக்களப்பு, எல்லைக் கிராமங்களான புணாணை மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு சென்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்

மீள்குடியேறிய தங்களுக்கு இதுவரையில்  அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினரிடம்  அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
புணாணை மேற்கிலுள்ள முள்ளிவட்டவான், பொத்தானைப்பாலம்  ஆகிய கிராமங்களிலிருந்து  யுத்த சூழல் காரணமாக  1985ஆம் 1990ஆம் 1995ஆம் ஆண்டுகளில் வெளியேறிய 150 க்கும்  மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களும் சில முஸ்லிம் குடும்பங்களும் தங்கள் இருப்பிடங்களில் மீள்குடியேற ஆரம்பித்துள்ளனர். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் 32 தமிழ்க் குடும்பங்களும் 32 முஸ்லிம் குடும்பங்களும் முதற்தடவையாக மீள்குடியேற அனுமதிக்கப்பட்டது. இதன்போது,  8 சீமெந்து பக்கெட்டுகளும் 12 கூரைத்தகரங்களும் வழங்கப்பட்டன.

இருப்பினும், தங்களுக்கு வீடு, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென அக்கிராம மக்கள் கூறினர்.
மேலும், சிலர் அத்துமீறிக் காணிகளை பிடிப்பதும் இம்மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,  'இவ்விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சரின்  கவனத்துக்கு கொண்டுவருவதுடன், இம்மக்களுக்கு வீடு உட்பட வசதிகளை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்ஆனால், மீள்குடியேற்றம் என்ற வகையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டை மேற்கொண்டாலும், அனுமதிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புணாணை கிழக்கு பகுதியில் இருந்து சிங்கள குடும்பங்கள் 5 யுத்த காலத்தில் வெளியேறியமையை சுட்டிக்காட்டும் மீள்குடியேற்ற அமைச்சர் எந்த வகையில் மேலதிகமாக 24 சிங்கள குடும்பங்களை இங்கு குடியேற்ற முடியும்

 


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624845

Translate