ஞாயிறு, 22 நவம்பர், 2015

குப்பை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வாகரை மீயான்குளம் சந்தியில் இருந்து காரமுனை பிரதேசத்திற்குச் செல்லும் வழியில் வாழைச்சேனை பிரதேச சபையால் கொட்டப்படும் குப்பைகளை உண்பதற்கு யானைகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதாகவும், அப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் கோரியும் காரமுனை பிரதேச மக்கள் அமைதியான முறையில் சுலோகங்களை ஏந்தி தங்களது எதிர்ப்பினை பிரதேச சபையால் குப்பைகளை கொட்டும் பிரதேசத்தில் நடாத்தினர்.
வாகரை பிரதேச சபை பிரிவிற்குள் உள்ள மீயான்குளம், காரமுனை, ஓமடியாமடு பிரதேசங்களுக்குச் செல்லும் வழியில் வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை உண்பதற்கு வரும் யானைகளினால் போக்குவரத்து செய்யும் பொது மக்கள் தாக்கப்படுவதாகவும்,
அப்பகுதியை அண்மித்த பகுதிகளை சேர்ந்த குடியிருப்புக்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை நாசப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு யானை வேலிகளை அமைத்துத் தருவதுடன், பிரதேச சபைகளால் கொட்டப்படும் குப்பைகளை அப்பகுதிகளில் கொட்டாமல் மாற்று இடம்களை தெரிவு செய்து அந்தப்பகுதிகளில் கொட்டுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன்,
தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனிடம் கையளித்தனர்.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate