சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் பாலித்த மகிபால ஆகியோர் நேற்று சனிக்கிழமை நண்பகல் திருகோணமலை தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எம்.நசீர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், லாஹீர் மற்றும் பலர் அவர்களுடன் இணைந்தது வைத்தியசாலையினை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இன்றையதினம் கந்தளாய், குச்சவெளி, புல்மோட்டை,கிண்ணியா மற்றும் திருக்கோணமலை ஆகிய வைத்தியசாலைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு, அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
மேலும், வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் மூலமாக நிதியினைக் கையாண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துரைப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக