பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
திருகோணமலை கடற்படை முகாமிற்கு காணாமல் போனோர் தொடர்பிலான ஐ.நா வின் விசாரணைக் குழு அண்மையில் சென்றிருந்ததோடு, அந்த முகாமில் குறித்த வான் அடையாளம் காணப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் கடற்படையை குறிக்கும் இலக்கத்தகடுடன் காணப்படும் இந்த வான், பல கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே வான் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வானை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டில் எடுக்க சென்ற நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் அவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தெஹிவளை பகுதியில் வைத்து 5 மாணவர்களை கடத்தியமை தொடர்பில் விசாரணை செய்துவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் இந்த கடத்தலின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் திருமலை இரகசிய முகாமில் வைக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படையின் கட்டளை தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக