சனி, 28 நவம்பர், 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்கிறார் அரியம்.

(பழுவூரான்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்னும் கருத்தினை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே குறிப்பிட்டிருந்தார். இது குறித்து முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களிடம் தொடர்புகொண்டு
கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தலைவர் சம்பந்தன் ஐயா எதற்காகக் இக்கருத்தினை தெரிவித்தார் என்பது எனக்குப் புரியவில்லை. அக்கருத்தினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். மேலும் தெரிவிக்கையில்,
2001ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிக்கப்படுகின்றமையையும், தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று இருந்த தமிழரசுக் கட்சி, TELO, EPRLR. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்(ACTC) ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். இதில் அதிகமான பங்களிப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தையே சாரும் அதில் நானும் இடம்பெற்றிருந்ததன் காரணமாகத்தான் என்னால் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2002ம் ஆண்டு 16 உறுப்பினர்கள் அம்முறை நடந்த பாராளுமன்ற தேர்தலிலே வெற்றி பெற்றனர். அடுத்த தேர்தலிலே 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வடகிழக்கில் வேட்பாளர்களை தீர்மானித்தது விடுதலைப் புலிகள் தான். கிழக்கில் கருணா அம்மான் அதனை முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624956

Translate