செவ்வாய், 24 நவம்பர், 2015

மட்­டக்­க­ளப்பில் 2,218 சிங்களவர்கள் மீள்குடியேற்றம் அமைச்சர் சுவா­மி­நாதன்



சட்­­வி­ரோத ஆக்­கி­­மிப்­புக்கு எதி­ரா­கவே நட­­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­­டு­கின்­றனவே தவிர சட்டரீதி­யான குடி­யேற்­றங்­­ளுக்கு எதி­ராக எது­வி­­மான நட­­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­­­வில்லை என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரிவித்தார்.
 
மட்­டக்­­ளப்பு மாவட்­டத்தில் 719 குடும்­பங்­களைச் சேர்ந்த 2,218 சிங்­கள மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­­தா­கவும் அவர் அறிவித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது .தே.கட்­சியின் மாத்­தறை மாவட்ட எம்.பி. புத்­திக பத்­தி­ரன எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளித்­­போதே அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் இவ்­வாறு தெரி­வித்தார்.
 
அவர் மேலும் தன­து­ பதிலில்;
மட்­டக்­­ளப்பு மாவட்­டத்தின் மொத்த சனத்தெகை 5 இலட்­சத்து 82 ஆயிரத்து 323 ஆகும். இதில் 3 ஆயி­ரத்து 306 பேர் சிங்­கள மக் கள் ஆவார்கள். இவ் எண்­ணிக்­கையில் 961 குடும்­பங்­களைச் சேர்ந்த 3288 பேர் இடம்­பெ­யர்ந்­துள்ள நிலையில் அவர்­களில் 719 குடும்­பங்­களைச் சேர்ந்த 2218 பேர் மீள்­கு­டி­­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
 
இம்­மக்­­ளுக்கு எந்­­வி­­மான பாகு­பாடும் இல்­லாமல் அரச உத­விகள், சேவைகள் வழங்­கப்­­டு­கி­றது. சட்­­வி­ரோ­­மான ஆக்­கி­­மிப்­புக்கு எதி­ரா­கவே நட­­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­­டு­கின்­றன. சட்ட ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­­டிக்­கை­­ளுக்கு எவ்­வி­­மான இடை­யூ­று­களும் ஏற்­­டுத்­தப்­­­வில்லை. யுத்­தத்தால் வீடு­களை இழந்­­வர்­களின் தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.
 
ஒவ்­வொரு பிர­தேச செய­லக மற்றும் மட்­டக்­­ளப்பு மாவட்ட செய­­கத்தில் தக­வல்கள் பேணப்­­டு­கி­றது. சுய­வி­ருப்பின் பேரில் மீள் குடி­யேற வந்த இடம்­பெ­யர்ந்த சிங்­கள குடும்­பங்கள் அவர்­களின் நிரந்­தர இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624914

Translate