திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சேருவிலையில் முற்பகல் 11 மணிக்கு தயாராகும் பஸ் மூதூரிலிருந்து நண்பகல் 12 மணிக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் மூதூர் சாலை முகாமையாளர் ஏ.எல் நௌபீர் குறிப்பிட்டார்.
மேலும் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நண்பகல் ஒரு மணிக்கு மூதூருக்கான பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
350 ரூபா போக்குவரத்து கட்டணத்துடன் சாதாரண சேவை இடம்பெறவுள்ளதாகவும் சாலை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக