வியாழன், 26 நவம்பர், 2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வாகரை மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து உதவி பொருள் விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வாகரை கட்டுமுறிவுப்பகுதியில் உள்ள சுமார் 150 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

1500ருபா பெறுமதியான இந்த உலர் உணவுப்பொதியில் அரசி,கோதுமைமா,சீனி,ரின்மீன் உட்பட ஒன்பது பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடசி உறுப்பினர் கே.குகன் தெரிவித்தார்.

நோர்வே தமிழர் அமைப்பின் நிதியுதவியுடன் இந்த உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கே.குகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்,செயலாளர் அண்ணாத்துரை உட்பட கட்சியின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வாகரை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியான உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.











Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate