செவ்வாய், 24 நவம்பர், 2015

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் முன்னேற்ற ஐந்து நாள் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

ஜிரிஸற் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைதொழில் விவசாய சம்மேளத்தின் ஏற்பாட்டில் இது தொடர்பான நிகழ்வு சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் தலைவர் எஸ்.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் ஜிரிஸற் அமைப்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பகிரதன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் முகாமையாளர் க.குகதாஸ் உட்பட வளவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 20பேர் கலந்துகொண்டனர்.

உங்கள் தொழிலை முன்னேற்றுங்கள் என்னும் தலைப்பில் இந்த ஐந்து நாள் செயலமர்வு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624947

Translate