காரைதீவின் செய்தி இணையதளமாக விளங்குகின்ற எமது சகோதர இணையத்தளமான karaitivunews.com ஊடகமானது வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடாத்திய 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அம் மாணவர்களை புலமையாளர்களாக்கிய ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் 2014ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த சாதனையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று 29ம் திகதி வெகு கோலாகலமான முறையில் இணையதளத்தின் பணிப்பாளர் திரு வை.கோபிகாந் அவர்களின் தலைமையில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் விபுலானந்த அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
திங்கள், 30 நவம்பர், 2015
Home »
» karaitivunews.com இன் புலமையாளர் பாராட்டுவிழா - 2015.
0 facebook-blogger:
கருத்துரையிடுக