பண்ணையாளர்களின் உற்பத்தியை அதிகரித்து வருமானத்தை பெறும்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16.7 மில்லியன் ரூபா நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் திருமதி உதயராணி குகேந்திரன் தெரிவித்தார்.
கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து கூறுகையில்
“கிழக்கு மாகாண சபையிலிருந்து 11.7 மில்லியன் ரூபாவும் மத்திய அரசிலிருந்து 5 மில்லியன்ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி மூலம் கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் ஆலோசனையின் பேரின் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 புதிய பண்ணையாளர்களுக்கு மாடுகளை கொள்வனவு செய்து வளர்பதற்காக 1.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 30 ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் கொட்டில்கள் அமைப்பதற்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளோம்.
கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கோடு தெரிவு செய்யப்பட்ட 1040 கோழி வளர்ப்பவர்களுக்கு 9.6 மில்லியன் ரூபா செலவில் ஒரு மாத கோழிக் குஞ்சுகள் தலா 20 வீதம் வழங்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 60 பண்ணைகளில் கன்றுகளைப் பராமரிப்தற்கும் உணவு மற்றும் பூச்சி மருந்து வழங்கி 18 மாதங்களில் கன்றுகளை ஈன்று எடுக்கும் வகையில் 6 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆடுகள் இல்லாத 60 பண்ணைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆடுகளுக்கு அடையாளமிட்டு உரிமைப் பத்திரம் வழங்குவதற்காக மூன்று இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
புல் வழர்ப்பதற்காக 50 சதவீத மானிய அடிப்டையில் அதற்கான உபகரணங்களை வழங்கியுள்ளளோம்.
எங்களுடைய பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் பிரதேச மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பால் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்களுக்கு 20 சைக்கில்களை வழங்கவுள்ளோம்.
போஷாக்குள்ள பரம்பரையை உருவாக்கும் முகமாக பாலர் பாடசாலைகளுக்கு சூடாக்கிய பால் வழங்கவதற்கு 16 இலட்சம் ரூபா செலவிடவுள்ளோம்.
செங்கலடி மற்றும் சத்துருக்கொண்டான் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்குரிய உணவு உற்பத்தி தொழிற்சாலைகளை மீள புனரமைக்க திட்டமிட்டுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் லீட்டராக இருந்த பால் உற்பத்தி தற்போது ஒரு இலட்சம் லீட்டராக அதிகரித்துள்ளது இதல் எமது மக்கள் பயன் பெற வேண்டும். கோழி வளர்ப்பு மேற்கொள்ள விரும்புவோருக்கு ஆலோசனை மற்றும் மானி அடிப்படையில் உதவிகளை செய்வதற்கு எமது திணைக்களம் தயாராகவுள்ளது” என்றார்.
கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து கூறுகையில்
“கிழக்கு மாகாண சபையிலிருந்து 11.7 மில்லியன் ரூபாவும் மத்திய அரசிலிருந்து 5 மில்லியன்ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி மூலம் கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் ஆலோசனையின் பேரின் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 புதிய பண்ணையாளர்களுக்கு மாடுகளை கொள்வனவு செய்து வளர்பதற்காக 1.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 30 ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் கொட்டில்கள் அமைப்பதற்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளோம்.
கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கோடு தெரிவு செய்யப்பட்ட 1040 கோழி வளர்ப்பவர்களுக்கு 9.6 மில்லியன் ரூபா செலவில் ஒரு மாத கோழிக் குஞ்சுகள் தலா 20 வீதம் வழங்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 60 பண்ணைகளில் கன்றுகளைப் பராமரிப்தற்கும் உணவு மற்றும் பூச்சி மருந்து வழங்கி 18 மாதங்களில் கன்றுகளை ஈன்று எடுக்கும் வகையில் 6 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆடுகள் இல்லாத 60 பண்ணைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆடுகளுக்கு அடையாளமிட்டு உரிமைப் பத்திரம் வழங்குவதற்காக மூன்று இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
புல் வழர்ப்பதற்காக 50 சதவீத மானிய அடிப்டையில் அதற்கான உபகரணங்களை வழங்கியுள்ளளோம்.
எங்களுடைய பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் பால் பிரதேச மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பால் கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்களுக்கு 20 சைக்கில்களை வழங்கவுள்ளோம்.
போஷாக்குள்ள பரம்பரையை உருவாக்கும் முகமாக பாலர் பாடசாலைகளுக்கு சூடாக்கிய பால் வழங்கவதற்கு 16 இலட்சம் ரூபா செலவிடவுள்ளோம்.
செங்கலடி மற்றும் சத்துருக்கொண்டான் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்குரிய உணவு உற்பத்தி தொழிற்சாலைகளை மீள புனரமைக்க திட்டமிட்டுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் லீட்டராக இருந்த பால் உற்பத்தி தற்போது ஒரு இலட்சம் லீட்டராக அதிகரித்துள்ளது இதல் எமது மக்கள் பயன் பெற வேண்டும். கோழி வளர்ப்பு மேற்கொள்ள விரும்புவோருக்கு ஆலோசனை மற்றும் மானி அடிப்படையில் உதவிகளை செய்வதற்கு எமது திணைக்களம் தயாராகவுள்ளது” என்றார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக