திங்கள், 23 நவம்பர், 2015

இன்று முதல் வாகனங்களின் விலை அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் அனைத்து வகையான வாகனங்களின் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வாகனங்களுக்கான அலகு வீதம் மற்றும் புதிய மதீப்பீட்டு நடவடிக்கை காரணமாக வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் வாகனங்களின் விலை 2 இலட்சம் தொடக்கம் 2 தசம் 5 மில்லியன் வரை அதிகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் இலத்திரனியல் வாகனங்களுக்கான வரி 5 தொடக்கம் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் இந்திக்க சம்பத் மெரின்சிகே (Indika Sampath Merenchige) தெரிவித்துள்ளார்.
1000 சிசி வலுக்கொண்ட வாகனங்களின் இறக்குமதிக்கான வரியும் 50 வீதம் தொடக்கம் 70 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுரிய சக்தி, ஹைட்ரஜன் மற்றும் ஹிலீயத்தில் இயங்கும் வாகனங்களுக்கான சுங்க வரியை 2 தசம் 5 வீதத்தால் அரசாங்கம் அதிகரித்திருந்தது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate