வெள்ளி, 27 நவம்பர், 2015

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மன்றம் ஏற்பாடுசெய்த மாவீரர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவீரர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்ற்பட்டதுடன் ஒரு நிமிடம் மௌ அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அதிதிகள் உரை நடைபெற்றதுடன் மாவீரர்கள் நினைவுப்பகிர்வும் நடைபெற்றது.







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624933

Translate