வியாழன், 26 நவம்பர், 2015

அமெரிக்க தூதரக இராணுவ சிவில் குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் சந்திப்பு

அமெரிக்க தூதரக இராணுவ சிவில் குழுவின் சார்பில் சம்பூரில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி வேலை திட்டங்களையும், அங்கு மேற்கொள்ளவேண்டிய வேலைத் திட்டங்களையும் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிசாமோடு சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அமெரிக்கத் தூதரக இராணுவ சிவில் குழுவின் தலைவர் டெமற்றியஸ் ஹமண்ட் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பு இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்யும் வண்ணம் அம்பாறை, திருகோணமலை, மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களில் ஆங்கிலமொழி அபிவிருத்தி வள நிலையங்களை அமைத்துத் தருமாறு குறித்த குழுவினருடன் முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.  
இதனை கருத்திற்கொண்ட அமெரிக்க தூதரக இராணுவ சிவில் குழுவின் தலைவர் இந்த விடயம் தொடர்பில் தாம் அக்கறை எடுப்பதாக உறுதியளித்ததோடு, கிழக்கு மாகாணத்தில் பின் தங்கியுள்ள பல பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னேடுக்கவுள்ளதகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். எம். நசீர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம், மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ. நிசாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate