வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து தெரிவிக்கையில்
“புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட் தனவந்தர்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதே தவிர வாக்களித்த வறிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதாக இவ்வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.
அரசாங்கம் நீண்டகாலமாக சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பில விடுதலை செய்யும் என ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவ் எதிர்பார்ப்பை நிறைவேறாது தற்போது பிணையிலும், அதேவேளை புனர்வாழ்வளித்தும் விடுதலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. அதிலும் இழுபறி நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிக அதிகப்படியாக 306.7 பில்லியன் நிதியாக பாதுகாப்பு செலவீனங்களுக்காக வழங்கியுள்ளது. இது மொத்த நிதியில் 15.80 வீதமாகும். இவ்வேளை யுத்தம் முடிவடைந்த நிலையில் 2010ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு 202 பில்லியன், 2011ம் ஆண்டு 215 பில்லியனும், 2012ம் ஆண்டு 289 பில்லியனும், 2014ம் ஆண்டு 262 பில்லியனும் ஒதுக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வரவு செலவுத் திட்டம் மிக அதிகமான நிதியை ஒதுக்கியதன் காரணம் யாது? தற்போதும் யுத்த நிலை உள்ளதா? அவசிய தேவையாக புதுப்புது நோய்கள் பெருகி வருகின்ற நிலையில் சுகாதாரத்துக்கு 8.97 வீதம் ஒதுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்கு 15.80 வீதம் ஒதுக்கப்பட்டமை பொருத்தமற்ற செயற்பாடாகும்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து யுத்தத்தின் காணரமாக இடம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் இன்னும் மீள்குடியேற்ற வேண்டிய நிலையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதார மேன்பாடுகளை மேற்கொள்ளவும், அத்தோடு புனர்வாழ்வு செயற்பாடுகளை மேற்கொள்ளவும், இந்து விவகார செயற்பாட்டுக்களுக்காகவும், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இந்து விவகார அமைச்சுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்தில் 3.8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருகின்றது என்ற காரணத்துக்காக 7 பில்லியனை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மீள்குடியேற்ற இந்து விவகார அமைச்சுக்கு ஒதுக்கிய இவ்வரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அதை அரைவாசியாக குறைத்துள்ளது. குறிப்பாக இதற்காக 0.19 வீதம் நிதியே வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பௌத்தசாசன அமைச்சுக்கு பௌத்த மத செயற்பாட்டுக்காக 1.3 பில்லியனை ஒதுக்குவதன் மூலம் 0.07 நிதி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த சூழல் பாதிப்பை எதிர்கொண்ட வடக்கு கிகழ்கு பகுதியில் பல மதஸ்தலங்களை புனரமைக்கப்பட உள்ள நிலையில் ஒட்டு மொத்த இலங்கையில் இந்து மத செயற்பாடுகளுக்கு 0.19 பில்லியனும், கிறிஸ்தவ மதச் செய்பாடுகளுக்கு 0.076 பில்லியனும், முஸ்லிம் மத செயற்பாடுகளுக்கு 0.1 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பௌத்தம் தனி அமைச்சாகவும், அதேவேளை பெரும் தொதை நிதி ஒதுக்கீட்டையும் கொண்டுள்ளது. இந்நாட்டில் ஏனைய இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய இனங்கள் மதங்களை சார்ந்தவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை காட்டியுள்ளது.
கடந்த யுத்த சூழலால் வடக்கு கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியமானது என்பதை அரசாங்கமும் சர்வதே சமூகமும் அறியும். ஆனால் அதற்கு ஒரு மகாநாட்டை எற்படுத்தி நிதி திரட்டுவதாக இவ்வரவு செலவு திட்டம் குறிப்பிட்ட வேளையில் இவ்வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மூலம் வட மேற்கு அபிவிருத்திக்காக 6.2 பில்லியனும் தெற்கு அபிவிருத்திக்கு 0.113 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபவிருத்தி அமைச்சுக்கு 0.68 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 0.04 வீதம் நிதி இது வடமேற்கு அபிவிருத்தி ஒதுக்கிய நிதியுடன் ஒப்பிடும் போது மிக குறைவாகும்.
தனியார் துறையின் பங்களிப்புடன் நடுத்தர மட்ட அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 150,000 வீட்டுத் திட்ட அலகுகளையும் அரசாங்க சிரேஷ்ட ஊழியர்களுக்கு 5000 வீட்டு அலகுகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் அரச காணிகளில் நிர்மானிக்கப்படும் வீட்டுத் திட்டமானது வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் இன விகிதாசாரத்தை மாற்றும் முயற்சியாக அமையக் கூடாது
முன்பள்ளிகள் சிறுவர்கள் ஆரம்ப கல்வி மேன்பாட்டில் கூடிய கவனம் செலுத்துகின்றது. ஆனால் இவ்வரவு செலவுத் திட்டத்தில் முன்பள்ளிகளை அரசாங்கத்தில் உள்வாங்க செய்தல் சார்பாகவோ அவற்றில் கல்வி புகட்டும் ஆசிரியர்களை அரசாங்கத்தில் உள்வாங்கி அவர்களுக்கு எதாவது கொடுப்பனவை வழங்குவது சார்பாகவே எவ்வித முன்மொழிவும் இம்பெறவில்லை.
கடந்த யுத்த சூழலால் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. ஒட்டிசுட்டானில் வாழ்வாதார அபிவிருத்தியை முன்னிட்டு சிவப்புக்களி தொழிற்சாலை ஒன்றை தனியார் அரசாங்கத்தின் பங்குபற்றுதலுடன் ஸ்தாபிப்பதாக முன்மொழியப்பட்டதை வரவேற்கும் இந்நிலையில் வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனியை அரசாங்கம் இவ்வரவு செலவுத் திட்ட முன்மொழியின் திருத்தத்தில் ஒன்றாக கவனத்தில் கொண்டு வந்து அதற்கு விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றையும் தனியார் உதவியையும் கொண்டு மீண்டும் சிறப்பாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த கால யுத்த சூழலின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடு சார்பாக எவ்வித முன்மொழிவுகளும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை.
யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த விசேட சலுகையும் கொண்டுவரப்படவில்லை. இவர்கள் வாழ்வாதார ரீதியில் மிகவும் கஷ்ரப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடு சார்பாக எந்த முன்மொழிவும் இடம்பெறவில்லை” என்றார்
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து தெரிவிக்கையில்
“புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட் தனவந்தர்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதே தவிர வாக்களித்த வறிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதாக இவ்வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.
அரசாங்கம் நீண்டகாலமாக சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பில விடுதலை செய்யும் என ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவ் எதிர்பார்ப்பை நிறைவேறாது தற்போது பிணையிலும், அதேவேளை புனர்வாழ்வளித்தும் விடுதலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. அதிலும் இழுபறி நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிக அதிகப்படியாக 306.7 பில்லியன் நிதியாக பாதுகாப்பு செலவீனங்களுக்காக வழங்கியுள்ளது. இது மொத்த நிதியில் 15.80 வீதமாகும். இவ்வேளை யுத்தம் முடிவடைந்த நிலையில் 2010ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு 202 பில்லியன், 2011ம் ஆண்டு 215 பில்லியனும், 2012ம் ஆண்டு 289 பில்லியனும், 2014ம் ஆண்டு 262 பில்லியனும் ஒதுக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வரவு செலவுத் திட்டம் மிக அதிகமான நிதியை ஒதுக்கியதன் காரணம் யாது? தற்போதும் யுத்த நிலை உள்ளதா? அவசிய தேவையாக புதுப்புது நோய்கள் பெருகி வருகின்ற நிலையில் சுகாதாரத்துக்கு 8.97 வீதம் ஒதுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்கு 15.80 வீதம் ஒதுக்கப்பட்டமை பொருத்தமற்ற செயற்பாடாகும்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து யுத்தத்தின் காணரமாக இடம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் இன்னும் மீள்குடியேற்ற வேண்டிய நிலையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதார மேன்பாடுகளை மேற்கொள்ளவும், அத்தோடு புனர்வாழ்வு செயற்பாடுகளை மேற்கொள்ளவும், இந்து விவகார செயற்பாட்டுக்களுக்காகவும், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இந்து விவகார அமைச்சுக்கு இவ்வரவு செலவுத் திட்டத்தில் 3.8 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருகின்றது என்ற காரணத்துக்காக 7 பில்லியனை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மீள்குடியேற்ற இந்து விவகார அமைச்சுக்கு ஒதுக்கிய இவ்வரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற்ற பின் அதை அரைவாசியாக குறைத்துள்ளது. குறிப்பாக இதற்காக 0.19 வீதம் நிதியே வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பௌத்தசாசன அமைச்சுக்கு பௌத்த மத செயற்பாட்டுக்காக 1.3 பில்லியனை ஒதுக்குவதன் மூலம் 0.07 நிதி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த சூழல் பாதிப்பை எதிர்கொண்ட வடக்கு கிகழ்கு பகுதியில் பல மதஸ்தலங்களை புனரமைக்கப்பட உள்ள நிலையில் ஒட்டு மொத்த இலங்கையில் இந்து மத செயற்பாடுகளுக்கு 0.19 பில்லியனும், கிறிஸ்தவ மதச் செய்பாடுகளுக்கு 0.076 பில்லியனும், முஸ்லிம் மத செயற்பாடுகளுக்கு 0.1 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பௌத்தம் தனி அமைச்சாகவும், அதேவேளை பெரும் தொதை நிதி ஒதுக்கீட்டையும் கொண்டுள்ளது. இந்நாட்டில் ஏனைய இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய இனங்கள் மதங்களை சார்ந்தவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை காட்டியுள்ளது.
கடந்த யுத்த சூழலால் வடக்கு கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியமானது என்பதை அரசாங்கமும் சர்வதே சமூகமும் அறியும். ஆனால் அதற்கு ஒரு மகாநாட்டை எற்படுத்தி நிதி திரட்டுவதாக இவ்வரவு செலவு திட்டம் குறிப்பிட்ட வேளையில் இவ்வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மூலம் வட மேற்கு அபிவிருத்திக்காக 6.2 பில்லியனும் தெற்கு அபிவிருத்திக்கு 0.113 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபவிருத்தி அமைச்சுக்கு 0.68 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 0.04 வீதம் நிதி இது வடமேற்கு அபிவிருத்தி ஒதுக்கிய நிதியுடன் ஒப்பிடும் போது மிக குறைவாகும்.
தனியார் துறையின் பங்களிப்புடன் நடுத்தர மட்ட அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 150,000 வீட்டுத் திட்ட அலகுகளையும் அரசாங்க சிரேஷ்ட ஊழியர்களுக்கு 5000 வீட்டு அலகுகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் அரச காணிகளில் நிர்மானிக்கப்படும் வீட்டுத் திட்டமானது வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் இன விகிதாசாரத்தை மாற்றும் முயற்சியாக அமையக் கூடாது
முன்பள்ளிகள் சிறுவர்கள் ஆரம்ப கல்வி மேன்பாட்டில் கூடிய கவனம் செலுத்துகின்றது. ஆனால் இவ்வரவு செலவுத் திட்டத்தில் முன்பள்ளிகளை அரசாங்கத்தில் உள்வாங்க செய்தல் சார்பாகவோ அவற்றில் கல்வி புகட்டும் ஆசிரியர்களை அரசாங்கத்தில் உள்வாங்கி அவர்களுக்கு எதாவது கொடுப்பனவை வழங்குவது சார்பாகவே எவ்வித முன்மொழிவும் இம்பெறவில்லை.
கடந்த யுத்த சூழலால் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பல தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. ஒட்டிசுட்டானில் வாழ்வாதார அபிவிருத்தியை முன்னிட்டு சிவப்புக்களி தொழிற்சாலை ஒன்றை தனியார் அரசாங்கத்தின் பங்குபற்றுதலுடன் ஸ்தாபிப்பதாக முன்மொழியப்பட்டதை வரவேற்கும் இந்நிலையில் வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனியை அரசாங்கம் இவ்வரவு செலவுத் திட்ட முன்மொழியின் திருத்தத்தில் ஒன்றாக கவனத்தில் கொண்டு வந்து அதற்கு விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றையும் தனியார் உதவியையும் கொண்டு மீண்டும் சிறப்பாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த கால யுத்த சூழலின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடு சார்பாக எவ்வித முன்மொழிவுகளும் இவ்வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை.
யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த விசேட சலுகையும் கொண்டுவரப்படவில்லை. இவர்கள் வாழ்வாதார ரீதியில் மிகவும் கஷ்ரப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடு சார்பாக எந்த முன்மொழிவும் இடம்பெறவில்லை” என்றார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக