மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் தின நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இப் பிரதேசத்தில் தரம் 5 புலைமப்பரிசில் பரீட்யைில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டது. மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு வாழ்வின் எழுச்சி திணைக்கள பிரிவினால் பாடசாலை உபகரணங்களும் ஒரு மாணவனுக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டது.
சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது.
இதன்போது உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு,கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக