மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றிரவு (11.08.2015) காத்தான்குடியிலுள்ள ஐ.ம.சு. கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு. கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, காத்தான்குடி அட்வகேட் அப்துல் காதர் (விளையாட்டு மைதான) வீதியிலுள்ள அரிசி ஆலையொன்றில் அமைக்கப்பட்டிருந்த ஐ.ம.சு. கூட்டமைப்பின் 1ம் இலக்க வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின்; தேர்தல் அலுவலகத்தை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு ஒரு அறை மூடப்பட்டிருப்பதை அவதானித்து அந்த அறைக்கு சீல் வைத்துச் சென்றனர்.
இன்று, (12.08.2015) உதவித் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிமன்றத்தில், குறித்த அறையைத் திறந்து சோதனையிடுவதற்கான நீதிமன்றக் கட்டளையைக் கோரியபோது, நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அதற்கு அனுமதியளித்தார்.
இதனையடுத்து குறித்த அறையை இன்று பொலீசார் திறந்து சோதனையிட்டபோது, அங்கு வாக்காளர்களுக்கு தேர்தல் இலஞ்சமாக வழங்குவதற்குத் தயாராக பொதி செய்து வைக்கப்பட்டிருந்த 4000க்கும் மேற்பட்ட பொதிகளைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
குறித்த மில் ஆலை உரிமையாளருக்கு எதிராக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டினைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல் திணைக்களமும், பொலீசாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சட்ட ஆய்வாளர் ஒருவர் சற்று முன்னர் தெரிவித்தார்.
இதேவேளை, காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் அலுவலகத்திற்கும் நேற்றிரவு தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சென்று தமது சோதனைகளை மேற்கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அலுவலகத்தில் இருந்த பொறுப்பாளர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினர்.
இதன்போது அங்கிருந்து எந்தவிதமான தடைசெய்யப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10ம் திகதி காத்தான்குடியில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டிலும் இவ்வாறு தேர்தல் இலஞ்சப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து சோதனை நடவடிக்கைக்குச் சென்ற உதவித் தேர்தல் அதிகாரியின்மீது காத்தான்குடி முன்னாள் நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீத் ஆகியோர் தாக்குதல் நடாத்த முயற்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது, காத்தான்குடி அட்வகேட் அப்துல் காதர் (விளையாட்டு மைதான) வீதியிலுள்ள அரிசி ஆலையொன்றில் அமைக்கப்பட்டிருந்த ஐ.ம.சு. கூட்டமைப்பின் 1ம் இலக்க வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின்; தேர்தல் அலுவலகத்தை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு ஒரு அறை மூடப்பட்டிருப்பதை அவதானித்து அந்த அறைக்கு சீல் வைத்துச் சென்றனர்.
இன்று, (12.08.2015) உதவித் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிமன்றத்தில், குறித்த அறையைத் திறந்து சோதனையிடுவதற்கான நீதிமன்றக் கட்டளையைக் கோரியபோது, நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அதற்கு அனுமதியளித்தார்.
இதனையடுத்து குறித்த அறையை இன்று பொலீசார் திறந்து சோதனையிட்டபோது, அங்கு வாக்காளர்களுக்கு தேர்தல் இலஞ்சமாக வழங்குவதற்குத் தயாராக பொதி செய்து வைக்கப்பட்டிருந்த 4000க்கும் மேற்பட்ட பொதிகளைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
குறித்த மில் ஆலை உரிமையாளருக்கு எதிராக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டினைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல் திணைக்களமும், பொலீசாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சட்ட ஆய்வாளர் ஒருவர் சற்று முன்னர் தெரிவித்தார்.
இதேவேளை, காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் அலுவலகத்திற்கும் நேற்றிரவு தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சென்று தமது சோதனைகளை மேற்கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அலுவலகத்தில் இருந்த பொறுப்பாளர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினர்.
இதன்போது அங்கிருந்து எந்தவிதமான தடைசெய்யப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10ம் திகதி காத்தான்குடியில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டிலும் இவ்வாறு தேர்தல் இலஞ்சப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து சோதனை நடவடிக்கைக்குச் சென்ற உதவித் தேர்தல் அதிகாரியின்மீது காத்தான்குடி முன்னாள் நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீத் ஆகியோர் தாக்குதல் நடாத்த முயற்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக