கிழக்கில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைக் கிராமங்களில் வாழும் மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலும் நிலவும் கடும் உஷ்ணம் காரணமாக இங்குள்ள மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக எல்லைக் கிராமங்கள், மீள்குடியேற்ற கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிப்பதற்குக் கூட குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் இங்கு நிலவும் கடும் உஷ்ணத்தை தணித்துக் கொள்வதற்கு பொது மக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கிச் செல்கின்றனர். மட்டு, அம்பாறை வீதிகளில் புதிதாக குளிர்பானக் கடைகள் அதிகரித்துள்ளன. இளநீர், பழரசம், பழவகைகள், நொங்கு போன்றவை அமோக விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
Home »
» கிழக்கில் நிலவும் வெப்பத்தால் குடிநீருக்குத் தட்டுப்பாடு
0 facebook-blogger:
கருத்துரையிடுக