25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரீ.ஜெயசீலன் தெரிவித்தார்.
இதுவே கிழக்கு மாகாணத்தில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றுக் காலை முதல் காத்தான்குடி பரீட் நகர் பிரதேசத்தில் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் நடாத்திய சுற்றிவளைப்பின் போது, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த ஹெரோயின், டெனீம் நீளக்காற்சட்டையின் இடுப்பு பட்டியினுள் பொலித்தீன் கவரினுள் வைத்து தைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இதன்போது இரு இளைஞர்கள் மற்றும் ஹெரோயினை கொழும்பிற்கு கடத்திச் செல்லும் மற்றொரு நபரும் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து பாஸ்போட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், கையடக்க தோலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
சனி, 16 மே, 2015
Home »
காத்தான்குடி
» 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் மூவர் கைது
0 facebook-blogger:
கருத்துரையிடுக