சனி, 16 மே, 2015

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் தேசிய கீதம் இசைத்ததனால் சிங்கள மாணவர்கள் தாக்குதல்



கிழக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடைபெற்றுக்கொண்டுள்ள கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலிபரப்பட்பட்டதாக கூறி செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விதாதாவள நிலையமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த மூன்று தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கண்காட்சியை நடாத்திவருகின்றறது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டதாகவும் இதன்போது சிங்கள மாணவர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் மீண்டும் சிங்களத்தில் தேசிய கீதம் ஒலிபரப்பட்டநிலையில் திடிரென சிங்கள மாணவர்கள் சிலர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு சென்ற ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate